காணி நிலம் வேண்டும்

•நவம்பர் 10, 2009 • கருத்துத் தெரிவிக்கவும்

bharathi

காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும், – அங்கு
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்தினிடையே – ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் – அங்கு
கேணியருகினிலே – தென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர்போலே – நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதிற் படவேணும், – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் – எங்கள்
கூட்டுக் களியினிலே – கவிதைகள்
கொண்டுதர வேணும் – அந்தக்
காட்டு வெளியினிலே – அம்மா! நின்றன்
காவலுற வேணும், – என்றன்
பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

கீதா சாரம்

•நவம்பர் 10, 2009 • கருத்துத் தெரிவிக்கவும்

Geetha Saram by Sri Krishna

இணைய அறிவிப்பு

•நவம்பர் 10, 2009 • கருத்துத் தெரிவிக்கவும்

சில தவிர்க்க இயலாத காரணங்களால் பக்கத்தை திருத்தியமைக்க இயலவில்லை என்பதை உங்களுக்கு உணர்த்த கடமைபட்டுள்ளேன்.

இனி இத்தளம் வழக்கம் போல் செயல்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரியமுடன்

ஆசிரியர் கார்த்திக்கேயன்.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

•ஆகஸ்ட் 23, 2009 • கருத்துத் தெரிவிக்கவும்

vinayagar

‘தெய்வீகத் துறவிகள்’ – இன்று கரும்புலிகள் நாள்!

•ஜூலை 5, 2009 • கருத்துத் தெரிவிக்கவும்

“பலவீனமான எமது இனத்தின் பலமான ஆயுதமாகவே நான் கரும்புலிகளை உருவாக்கினேன்” என்று கூறினார் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத் தேரின் நகர்வுப் பாதையில் – இறுமாப்போடு எழுந்து நின்ற தடைகளை எல்லாம் தகர்த்து எறிந்தவர்களுக்கான நாள்.

ltte black tigers

எம்மை விழுங்கக் காத்திருந்த விசப் பூதங்களை எல்லாம் அகற்றி எமது விடுதலைப் பாதையினைச் செப்பனிட்டுத் தந்தவர்களுக்கான நாள். தரை, கடல், வானம், தமிழீழத்திற்கு உள்ளே, தமிழீழத்திற்கு வெளியே என எங்கெங்கு எல்லாம் எமது பகைவர்கள் வீற்றிருந்தார்களோ – அங்கங்கு வைத்தே அவர்களின் ஆணிவேர்களைப் பிடுங்கியவர்களுக்கான நாள்.

தமிழரது அரசியல் தாகத்தை இந்த உலகின் முற்றத்தில் முரசறைந்து சொன்னவர்களுக்கான நாள். எமது இனத்தின் அதிசயங்கள் அவர்கள்; எமது திமிரின் அடையாளங்கள் அவர்கள். நியாயபூர்வமான எமது இனத்தின் அரசியல் வேட்கையினது குறியீடுகள் அவர்கள்.

அரசியல் விடுதலையை வென்றெடுப்பதில் எமது இனத்திற்கு இருக்கும் உறுதிப்பாட்டினதும், அர்ப்பண உணர்வினதும் வெளிப்பாடு அவர்கள். அவர்கள் இல்லாமல் போனவர்கள் அல்ல; எம்முள் எல்லாமுமாய் நிறைந்தவர்கள். நேற்று வரை மட்டுமல்ல; இன்று முதலும், எமது விடுதலையை நாம் வென்றெடுக்கும் வரையும்… அதற்கும் அப்பாலும் அவர்களே எங்கள் நெஞ்சுரம்.

யாழ்ப்பாணம் நெல்லியடியில் 1987, ஜூலை 5 ஆம் நாள் – கரும்புலி கப்டன் மில்லர் தொடக்கி வைத்த இந்த வரலாறு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு தனியான – தனித்துவமான – அத்தியாயமாகப் பதிவாகிவிட்டது. அன்று முதல் – கடந்த 22 வருடங்களில் – உரிமை கோரியும் உரிமை கோராமலும், தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் – 700 வரையான கரும்புலி மாவீரர்கள் தமிழீழம் என்ற எங்கள் ஆன்ம தாகத்தின் வெளிப்பாடாக தமது உயிர்களைத் தந்தார்கள். தேசியத் தலைவர் அவர்கள் கூறியதனைப் போல – “அடுத்தவர்கள் இன்புற்று இருப்பதற்காக தம்மை இல்லாது அழித்த தெய்வீகத் துறவிகள் அவர்கள்.”

அந்த தெய்வீகத் துறவிகளின் நினைவுடன்… அவர்கள் தந்து சென்றிருக்கும் துணிவுடன்… அவர்கள் ஊட்டிச் சென்றிருக்கும் உறுதியுடன்… – அவர்கள் செப்பனிட்டுச் சென்றிருக்கும் பாதை வழியே… – எல்லோரும் வாருங்கள்… போராட்டத் தேரை இழுத்து எங்கள் தேசத்தை விடுவிப்போம்.

பாப் மன்னன் மைகேல் ஜாக்சன் மரணம்

•ஜூன் 26, 2009 • கருத்துத் தெரிவிக்கவும்

micheal jackson

மைகேல் ஜாக்சன் ஆகஸ்ட் 29, 1958 – ஜூன் 25, 2009

“உண்மைகள் பிடிவாதமானவை”: ‘நிலவரம்’ ஏடு

•ஜூன் 24, 2009 • கருத்துத் தெரிவிக்கவும்

“உண்மைகளை எவராவது வெளிப்படுத்தா விட்டாலும் கூட இயல்பாகவே அவை தாமாகவே வெளிப்பட்டு விடும் தன்மை கொண்டவை. அதேவேளை, உண்மைகளை மறைத்து விடுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு செயற்பாடும் உண்மை வெளிப்படுவதை விரைவுபடுத்துவதாகவே ஆகிவிடுவதைப் பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கின்றோம்” என்று சுவிசில் இருந்து வெளிவரும் ‘நிலவரம்’ வாரமிருமுறை ஏடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ‘நிலவரம்’ ஏட்டுக்காக சண். தவராஜா எழுதிய கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“ஏசுவார்கள் எரிப்பார்கள்
உண்மையை எழுது
உண்மையாகவே எழுது” – யோகர் சுவாமிகள்
 
“எழுத்தாளனின் பணியென்ன அதில் என்னென்ன இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது பற்றித் தெளிவாகத் தெரிந்த நிலையில் சுவாமிகள் கூறிய கருத்து அது.

ஒரு எழுத்தாளனுக்கு, சமூகச் சிந்தனையாளனுக்கு எதிர்ப்புக்கள் உருவாவது இயல்பானதே. அவற்றைத் தடுத்துவிட முடியாது. வேறு வகையில் கூறுவதானால் அத்தகைய எதிர்ப்புக்களே எழுத்தாளன் சரியான திசையில் பயணிக்கிறான் என்பதற்கான காட்டிகள் எனலாம்.

உண்மைகள் பிடிவாதமானவை அவற்றை நீண்ட காலத்துக்கு மறைத்துவிட முடியாது. அமாவாசை நாட்களில் சந்திரன் மறைந்து போவதை வைத்துக்கொண்டு சந்திரனே காணாமற் போய்விட்டது எனக் கூறி விடலாமா? அது ஒரு சில நாட்களில் தானாக வெளிப்பட்டுத் தானே ஆகும்?.

அந்த வகையில் உண்மைகளை எவராவது வெளிப்படுத்தாவிட்டாலும் கூட இயல்பாகவே அவை தாமாகவே வெளிப்பட்டு விடும் தன்மை கொண்டவை. அதேவேளை, உண்மைகளை மறைத்து விடுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு செயற்பாடும் உண்மை வெளிப்படுவதை விரைவுபடுத்துவதாகவே ஆகிவிடுவதைப் பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கின்றோம்.

இன்று புலம்பெயர் தமிழ் மக்களிடையே ஒரு உண்மையை மறைத்து விடுவதற்குப் பகிரங்க முயற்சி நடப்பதைக் கண்கூடாகக் காண்கின்றோம். இதற்காக சிறுபிள்ளைத்தனமான பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு போய் விடும் என்ற அப்பாவித்தனமான எதிர்பார்ப்புடன் காரியங்கள் நடைபெற்று வருகின்றன.

அண்மைக்காலக் களச்சூழல் பற்றிய ஆதாரமில்லாத செய்திகள் பல இன்று இணையத்தளங்களில் உலாவருகின்றன. அவற்றைச் செய்திகள் என்று கூறுவதைவிட வதந்திகள் என்று கூறுவதே சாலப் பொருத்தமானது. ஆதாரமில்லாதபோது அவை வதந்திகள் தானே?.

அதேவேளை, வேறு சில செய்திகள் இணையத் தளங்களில் வந்த வேகத்திலேயே மறைந்து போகின்றன. ஏனென்று புரியவில்லை. முன்னரெல்லாம் ஒரு பரப்பான செய்தி வந்து விட்டால் நான் நீ என்று போட்டி போட்டு செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிடும் இணையத்தளங்கள் தற்போது எதுவுமே தெரியாதது போன்று மௌனம் சாதிக்கின்றன.

உண்மைக்கு முன்பு நடுநிலைமை என்று ஏதும் இல்லை எனக்கூறும் ஊடகங்கள் நடுநிலைமையுடன் நடக்கவும் இல்லை, உண்மையை வெளிப்படுத்தவும் இல்லை.

சிறிலங்கா அரசுடனான ஊடக யுத்தத்தில் உயிர்ப்பலியான மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள் போன்றோர் பணியாற்றிய ஊடகங்கள் கூட இது விடயத்தில் சரியான ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்பதே கவலைக்குரியது.

ஊடகங்கள் மட்டுமன்றி ஊடகவியலாளர்கள் பலரும் கூட ஆமைகளைப் போன்று தமது தலைகளை உள்ளே இழுத்துக்கொண்டுள்ளார்கள்.

மே மாதம் 17 ஆம் நாளுக்கு முன்னர் தமிழ்த் தேசியத்தின் காவலர்கள் போன்று தம்மைக் காட்டிக் கொண்டிருந்த பலர் இன்று தேடினாலும் கிடைக்க முடியாத நிலையில் உள்ளனர். மக்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ள இந்த நேரத்தில் வாய் திறக்க வேண்டிய இவர்கள் வாய்மூடி மௌனியாய் இருப்பது அப்பட்டமான சுயநலமே அன்றி வேறில்லை. இவர்கள் இன்று செய்ய வேண்டியது தெளிவான கருத்துக்களை முன்வைத்து மக்கள் செல்ல வேண்டிய சரியான பாதைக்கு வழிகாட்டுவதே ஆனால், அது செய்யப்படவில்லை.

ஊடகவியலாளர்களுக்கு சமூகப் பொறுப்பு இருக்கின்றது. அதனால் தான் அவர்கள் சமூகத்தில் மதிக்கப்படுகின்றார்கள். கௌரவிக்கப்படுகின்றார்கள். அந்தக் கௌரவமும் மதிப்பும் அவர்கள் கொண்டுள்ள பொறுப்புக்காக அன்றி அவர்கள் ஆற்றுகின்ற பணிக்காகவே தரப்படுகின்றது.

எனவே, அவர்கள் மீது சமூகம் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றியாக வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. அந்தப் பொறுப்பை மறந்து செயற்படுவது சமூகத்துக்கும் தமது மனச்சாட்சிக்கும் செய்யும் துரோகமாகும்.

இன்று இலங்கைத் தீவில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுள் சிங்கள ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் முன்னைவிட அதிகமாக உள்ளமையை அனைவரும் அறிவோம். அண்மையில் கூட சுதந்திர ஊடகவியலாளர் இயக்கத்தின் முக்கியஸ்தரான போத்தல ஜெயந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்களால் தாக்கப்பட்ட செய்திகள் வெளியாகியிருந்தன.

வேறு சில சிங்கள ஊடகவியலாளர்கள் தமிழர்கள் ஒரு சிலரின் காட்டிக்கொடுப்பு காரணமாக வெளிநாடுகளுக்குத் தப்பியோடியுள்ளனர். அவ்வாறு தப்பியோட முடியாத ஒரு சிலர் மிகுந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையிலும் கடந்த மே 27 ஆம் நாள் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைக் குழுவின் 11 ஆவது சிறப்பு கூட்டத் தொடரில் சுதந்திர ஊடகவியலாளர் இயக்க இணைப்பாளர் சுனந்த தேசப்பிரிய ஆசிய மனித உரிமைகள் பணிப்பகத்தின் சார்பில் அறிக்கையொன்றை வாசித்து ஊடகவியாளர்களுக்குப் பெருமை சேர்த்தார்.

சமூகத்தின் வழிகாட்டி எனக் கருதப்படுகின்ற ஊடகவியலாளர் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்கு சுனந்த ஒரு முன்னுதாரணத்தைப் படைத்திருக்கின்றார். இது தமிழ் ஊடகவியலாளர்கள் பின்பற்ற வேண்டிய ஒரு மாதிரி.

தமிழ்ச் சமூகம் குறிப்பாக புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஆரோக்கியமான கருத்தாடல் எதுவும் இல்லாது இறுகிப் போய்க் கிடக்கின்றது. இந்த இறுக்கமான சூழல் மாற்றியமைக்கப்பட வேண்டும். அதற்கான தருணம் இதுவே அந்தக் கலந்துரையாடல் ஊடாக எடுக்கப்படும் ஆரோக்கியமான முடிவுகள் தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலத்துக்கு வழிகாட்டுவதாக அமைய வேண்டும்.

அதற்கான முன் முயற்சிகளை எடுக்க வேண்டிய பொறுப்பு ஊடகவியலாளர்களையும் ஊடகங்களையுமே சார்ந்தது. உரிய காலத்தில் செய்யப்படாத எதுவுமே பயனற்றதாகி விடும். எனவே விரைந்து காரியங்கள் ஆற்றப்பட வேண்டியது அவசியம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோ ஒரு வழிகாட்டி! – தினமணி தலையங்கம்

•ஜூன் 23, 2009 • கருத்துத் தெரிவிக்கவும்

மேற்கு வங்க மாநில ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி புவி வெப்பமடைவதைக் குறைப்பதில் நல்லதொரு வழிகாட்டியாகத் திகழ்கிறார். இதை மற்றவர்களும் குறிப்பாக சாதாரண மக்களும் பின்பற்றத் தொடங்கினால் புவியின் வெப்பத்தைக் குறைப்பதுடன் கணிசமான அளவுக்கு ரூபாயையும் மிச்சப்படுத்தலாம்.
 
மின் விளக்குகளை எரியவிடுவதும், மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவதும், குளிர்சாதனப் பெட்டி போன்ற குளிரூட்டும் சாதனங்களைப் பயன்படுத்துவதும் நாகரிக வாழ்க்கையின் இன்றியமையாத அம்சங்களாகக் கருதப்பட்டாலும், பூமியைச் சுற்றியுள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை விழுவதற்கும் அதனால் புவி வெப்பம் அடைவதற்கும் அதுதான் காரணம் என்று அறிவியலாளர்கள் இப்போது இடைவிடாமல் அரற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

கீழை நாடுகளைவிட மேலை நாடுகளில் உள்ளவர்கள் அறிவாளிகள், புதிய புதிய கண்டுபிடிப்புகள் மூலம் மக்கள் இனிமையாக வாழ வழி செய்கிறார்கள், அவர்களுடைய அறிவியல் கண்டுபிடிப்புகள் பகுத்தறிவின் வெளிப்பாடுகள், அதனால் மனிதகுலம் அடைந்துவரும் நன்மைகளுக்கு அளவே இல்லை என்று புளகாங்கிதம் அடையாதவர்களே கிடையாது. ஆனால் ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் இயற்கையை நாசப்படுத்தும் சக்தி இருப்பதும், அதன் விளைவாக புவியில் உள்ள தாவரங்கள், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் பெருத்த அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதும் மெல்ல மெல்லத் தெளிவாகிக் கொண்டிருக்கிறது.

இனி இந்த முன்னேற்றங்களை ஒரேயடியாகத் தூக்கி எறிந்துவிட்டு மாட்டுவண்டி காலத்துக்கு யாராலும் போக முடியாது. ஆனால் தீமைகளின் தீவிரத்தைக் குறைக்க சில நடவடிக்கைகளை உடனே எடுத்தாக வேண்டும். அதற்கு மேற்கு வங்க ஆளுநரும் மகாத்மா காந்திஜியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி வழிகாட்டி வருகிறார்.

ஆளுநர் வெளியே செல்லும்போது அவருடன் பயணிக்கும் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்துவிட்டார். ஆளுநர் மாளிகையில் தேவையற்ற மின்சார சாதனங்களை நீக்குமாறு கூறிவிட்டார். அதிக அளவு மின்சாரத்தைத் துய்ப்பதும் வெப்பத்தை வெளியிடுவதுமான மின் விளக்குகளை அகற்றிவிட்டு, சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்காத மின்சார விளக்குகளைப் பொருத்தச் செய்தார். அதிக எண்ணிக்கையில் இருந்த குளிரூட்டிகளைக் குறைத்துவிட்டார். சுடுநீர் பெறுவதற்காக இருந்த மின்சார சூடேற்றிகளுக்குப் பதிலாக சூரிய சக்தியில் இயங்கும் சூடேற்றிகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளார். தினமும் 2 மணி நேரம் மாலை நேரத்தில் ஆளுநர் மாளிகையில் மின்சார விநியோகத்தை நிறுத்தி வைத்து மின்சாரப் பயன்பாட்டை வெகு கணிசமாகக் குறைத்திருக்கிறார்.

அவர் ஆளுநராகப் பதவியேற்றபோது 2005-06-ல் ஆளுநர் மாளிகையில் கரியமில வாயு வெளியேற்றம் 408 டன்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது; அதுவே, அவருடைய நடவடிக்கைகளுக்குப் பிறகு 335 டன்களாக இருக்கிறது.

இது சாதாரணமான சாதனை அல்ல. ஆடம்பரம், அதிகாரத்தை வெளிக்காட்டும் அனாவசியப் பகட்டு ஆகியவற்றைக் குறைத்துக் கொண்டாலே செலவும் குறையும், புவி வெப்பமடைவதும் கணிசமாகத் தணியும் என்பது இந்த உதாரணத்திலிருந்து அறிய முடிகிறது.

அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், விடுதிகள், ஆலயங்கள், திருமண மண்டபங்கள், வங்கிகள், அரசுத்துறை நிறுவனங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் போன்ற இடங்களில் அந்தந்த இடங்களுக்குப் பொறுப்பான தலைமை நிர்வாகி முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவருமே உறுதி எடுத்துக் கொண்டு மின்சாரத்தைச் சேமிக்க நடவடிக்கைகளைத் தொடங்கினால் மின்சார விரயம் கணிசமாகக் குறையும். அதனால் தொழில்துறைப்பயன்பாடு, விவசாயத் தேவை போன்றவற்றுக்கு மின்சார வாரியத்தால் கூடுதல் மின்சாரத்தை அளிக்க முடியும்.

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பஸ் போக்குவரத்தைச் சீர்படுத்தி பெரிய பஸ், மினி பஸ் ஆகியவற்றை எந்த நேரமும் இயக்குவதை உறுதி செய்தால் சொந்தமாக 2 சக்கர வாகனங்களை வாங்க வேண்டிய தேவை நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு அறவே ஏற்படாது.

இதனால் பெட்ரோல் பயன்பாடு கணிசமாகக் குறைந்து நம் நாட்டுக்கு மிகவும் தேவைப்படும் அரிய அன்னியச் செலாவணி கோடிக்கணக்கில் மிச்சப்படும். மின்சார ஸ்கூட்டர்களின் விற்பனையை ஊக்குவிக்க அவற்றுக்கு வரிச்சலுகை, எளிய கடன் வசதி போன்றவற்றை அளித்து மோட்டார் வாகனத்துறையில் தேவையற்ற பெட்ரோல், டீசல் வண்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்க அரசு உதவலாம்.

வீடுகளிலும் கிணறுகளில் தண்ணீர் இறைக்கப்பயன்படும் மின்சார மோட்டார், மிக்ஸி, கிரைண்டர், ஏ.சி., தரையைப் பெருக்க வாக்குவம்-கிளீனர் போன்ற சாதனங்களின் பயன்பாட்டை குறைத்துக் கொண்டால் மின்சாரம் கணிசமாக மிச்சப்படும். சூரிய சக்தியால் இயங்கும் சாதனங்களை படிப்படியாக புழக்கத்துக்குக் கொண்டுவந்தால் மின்சாரம் வெகுவாக மிச்சப்படும். சிறுதுளிதானே பெரு வெள்ளமாகிறது.

ஆய்வுக்காக

•ஜூன் 22, 2009 • கருத்துத் தெரிவிக்கவும்

ஆய்வுக்காக

நண்பனின் புதிய முயற்சி – நிகழ்படம்

•ஜூன் 21, 2009 • கருத்துத் தெரிவிக்கவும்